velanai animation

Saturday, May 21, 2011

திரு .அம்பலவாணர் செல்லையா

திரு .அம்பலவாணர் செல்லையா 

பழம்பெரும் அதிபர்

        வேலணையின் புகழ்பூத்த பெரியார் வரிசையில் வைத்துக் கருதப்படுபவராக இளைப்பாறிய அதிபர் அம்பலவாணர் செல்லையா அவர்கள் விளங்குகின்றார். 
                 வேலணை கிழக்கில் கொழும்பார் குடும்பம் என்றழைக்கப்பட்ட புகழ்பெற்ற குடும்பம் ஒன்றில் அம்பலவாணர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளுக்கு கனிஷ்ட புத்திரனாக 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி திரு .செல்லையா அவர்கள் பிறந்தார். தமது ஆரம்பக் கல்வியை வேலணை வங்களாவடி அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் ,வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலையிலும் பெற்றுக்கொண்டார். ஆசிரியர் கலாசாலைப் பயிட்சியை முடித்துக் கொண்ட செல்லையா அவர்கள் 1928 ஜனவரியில் யா /கரம்பன் சண்முகநாதன் வித்தியாலயத்தில் அதிபராக நியமனம் பெற்று 1930 வரை அங்கே கல்விச் சேவையை ஆற்றிவந்தார். தொடர்ந்து நயினாதீவில் சைவவித்தியா விருத்திச்சங்க பாடசாலையில் அதிபராக ஒரு வருடம் கடமையாற்றினார். 1932 ஜனவரியில் இருந்து யா /வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையேற்று 36 ஆண்டுகள் அதாவது 1968 ஆம் ஆண்டு வரை அவர் ஆசிரியர்த் தொழிலில் இருந்து இளைப்பாறும் வரை மிகச் சிறப்பாக வேலணைக் கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் ,அபிவிருத்தியில் அயராது சேவையாற்றினார். சேவையால் உயர்ந்த பெரிய உபாத்தியாயர் அவர்கள் 12 .09 .2004 இல் இறையடி எய்தினார். 

No comments:

Post a Comment